துப்பாக்கி படத்தின் பார்ட்-2 வரலாம் என்று நடிகர் விஜய் மறைமுகமாக தெரிவித்துள்ளார். முதன்முறையாக ஏ.ஆர்.முருகதாஸ், விஜய் கூட்டணியில் தீபாவளி தினத்தன்று வெளியாகி அனைத்து ஊர்களிலும் வசூலை வாரி குவித்து கொண்டு இருக்கும் படம் துப்பாக்கி. இதனால் அந்தபடத்தில் நடித்த விஜய், காஜல் அகர்வால், இயக்குநர் முருகதாஸ், தயாரிப்பாளர் தாணு உள்ளிட்ட அனைவரும் மகிழ்ச்சியில் இருக்கின்றனர். இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற விஜயிடம், படத்தில் காஜலை மணக்காமல் மீண்டும் ராணுவத்திற்கு செல்வது போன்று படமாக்கப்பட்டுள்ளதே, ஒருவேளை படத்தின் இரண்டாம் பாகம் வர வாய்ப்பு இருக்கிறதா என கேட்டபோது, அதற்கு விஜய், நானும் முருகதாஸிடம் இதைத்தான் கேட்டேன். அவர் வரலாம் என்பது போல மறைமுகமாக தெரிவித்தார். அதனால் துப்பாக்கி படத்தின் இரண்டாம் பாகம் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்று கூறியுள்ளார்.
No comments:
Post a Comment
thanks for u r comments