ஹீரோவிடம் சஸ்பென்சை சொன்னதால் தவித்தேன் என்றார் இயக்குனர். ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் பட இயக்குனர் பாலாஜி தரணிதரன். அவர் கூறியதாவது: ‘இப்படத்தை கடந்த மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டு ஏற்பாடுகள் செய்துவிட்டோம். ஆனால் குறைந்த தியேட்டர்களே கிடைத்ததால் ரிலீஸ் தேதியை தள்ளிவைத்தோம். முதலில் இப்பட கதையை சஸ்பென்சாக வைத்திருந்தேன். யாருக்குமே சொல்லவில்லை. இதற்காக ஹீரோவை தேர்வு செய்ய பலரை பார்த்தேன். பொருத்தமாக அமையவில்லை.
‘பீட்சா பட ஹீரோ விஜய் சேதுபதி ஹீரோ தேர்வுக்காக வந்தார். அவர் வேடத்துக்கு பொருத்தமாக இருப்பார் என்பதால் சஸ்பென்சாக வைத்திருந்த கதையின் காட்சிகளை சொல்லி நடிக்கச் சொன்னேன். நன்றாக செய்தார். இவரிடம் சஸ்பென்சை சொல்லிவிட்டதால் தவிக்க தொடங்கினேன். இக்கதை எனது நண்பரின் வாழ்வில் நடந்த நிஜ சம்பவம். அவர்தான் இப்படத்தின் கேமராமேனாக பணியாற்றி இருக்கிறார். காயத்ரி ஹீரோயின். இப்படத்தில் 25 நிமிட காட்சிகள் குறைக்கப்பட்டு மேலும் விறுவிறுப்பு கூட்டப் பட்டிருக்கிறது. இவ்வாறு தரணிதரன் கூறினார்.
No comments:
Post a Comment
thanks for u r comments