ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய், காஜல் அகர்வால் ஜோடியாக நடித்துள்ள துப்பாக்கி நேற்று ரிலீசானது. மும்பையில் குண்டு வைக்கும் தீவிரவாதிகளை ராணுவ வீரர்கள் அழிப்பது போன்று திரைக்கதை உருவாக்கப்பட்டு உள்ளது. இப்படத்தில் முஸ்லிம்களை விமர்சித்து இருப்பதாக எதிர்ப்பு கிளம்பி உள்ளது. சர்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் என்று தேசிய லீக் வற்புறுத்தி உள்ளது. ‘துப்பாக்கி’ படத்துக்கெதிராக போராட்டத்தில் ஈடுபடவும் சில அமைப்புகள் தயாராகி வருகின்றன. இதனால் விஜய் வீட்டுக்கு பொலிஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு உள்ளது. சென்னையில் உள்ள நீலாங்கரை கடற்கரையோரம் அவரது வீடு இருக்கிறது. அங்கு பொலிசார் நிறுத்தப்பட்டு உள்ளனர். இதுபோல் அடையாறில் உள்ள விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகரன் வீட்டிலும் பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. துப்பாக்கி படத்துக்கு தணிக்கை குழுவினர் யு சான்றிதழ் அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
thanks for u r comments