வெங்கட் பிரபு இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படம் பிரியாணி. இதில் நடிக்க ரிச்சா கங்கோபாத்யாய தேர்வாகியிருந்தார். கால்ஷீட்டும் ஒதுக்கிவிட்டார். படப்பிடிப்புக்கு போகும் நேரத்தில் படத்திலிருந்து அவரை நீக்கியுள்ளனர். ரிச்சா பற்றி இண்டஸ்ட்ரியில் நிறைய புகார்கள் வருகிறது. அதிகம் நைட் பார்ட்டிக்கு செல்வதால், காலையில் ஷூட்டிங்கிற்கு தாமதமாக வருவார். ஷூட்டிங் ஸ¢பாட்டில் எடுத்ததெற்கெல்லாம் கோபப்படுவார். வெளி மேக்அப்மேன்கள், சிகை அலங்கார கலைஞர்களை பயன்படுத்த மாட்டார், பைவ் ஸ்டார் ஓட்டலிலே அறை கேட்பார் என பட்டியல் நீள்கிறது. பிரியாணி படத்துக்கும் இதுபோல் டிமாண்ட் செய்ததால் அவர் படத்திலிருந்து நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ரிச்சாவுக்கு பதிலாக நயன்தாராவை நடிக்க வைக்க முயற்சிகள் நடந்தது. இப்போது அந்த வேடம் ஹன்ச¤காவுக்கு சென்றுவிட்டது.
No comments:
Post a Comment
thanks for u r comments