இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரின் கடைசிக் கட்டத்தில் அப்பாவி மக்களைக் காப்பதில் ஐ.நா. சபை தோல்வியடைந்து விட்டது என்று ஐ.நா. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையில் பல ஆண்டுகளாகப் போர் நடைபெற்று வந்தது. 2009ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற இறுதிக்கட்டப்போரில் அரசுப் படையினர், புலிகளை வீழ்த்தினர். இந்தப் போரில் 1 லட்சம் பேர் இறந்ததாக ஐ.நா. மதிப்பிட்டுள்ளது. ராணுவம், புலிகள் என்று இரு தரப்பும் போர்க் குற்றங்களில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டது. இந்நிலையில், இந்த உள்நாட்டுப் போர் தொடர்பாக ஐ.நா. நிபுணர்கள் விசாரணை நடத்தி அறிக்கை தயாரித்துள்ள தகவலை இப்போது பி.பி.சி. வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
இலங்கைத் தலைநகர் கொழும்பில் இருந்த ஐ.நா. உயர் அலுவலர்கள், அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்படுவதைத் தடுப்பது தங்கள் பொறுப்பு என்று கருதிச் செயல்படவில்லை. ஐ.நா. தலைமையகத்தில் இருந்த துறைத் தலைவர்களும் இந்த விஷயத்தில் அவர்களுக்கு சரியான உத்தரவுகளைப் பிறப்பிக்கவில்லை. மிகப் பெரும் அளவிலான பொதுமக்கள் உயிரிழப்பு என்பது அரசுப் படைகளின் குண்டுவீச்சால்தான் ஏற்பட்டது என்பதை பகிரங்கப்படுத்துவதில் ஐ.நா. தவறிவிட்டது. இலங்கையில் உள்ள ஐ.நா. ஊழியர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்க முடியாது என்று அந்நாட்டு அரசு 2008 செப்டம்பர் மாதம் எச்சரித்தது. இதைத் தொடர்ந்து, ஐ.நா. ஊழியர்களை அங்கிருந்து திரும்பப் பெற முடிவு செய்ததும் ........ சரியல்ல என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, இந்த அறிக்கையில் உள்ள பரிந்துரைகள் மீது நடவடிக்கை எடுக்க ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் உறுதியுடன் இருப்பதாக ஐ.நா. அதிகாரிகள் தெரிவித்தனர்.
இலங்கை மறுப்பு :: www.RPbrothers.in
இலங்கை அரசின் மனித உரிமைகள் தூதரும் அமைச்சருமான மகிந்த சரமசிங்கே, கொழும்பில் செய்தியாளர்களிடம் கூறுகையில், ""ஐ.நா. அறிக்கை அதிகாரப்பூர்வமாக இன்னும் வெளியாகவில்லை. ஊடகங்களில் கசிந்த அந்த அறிக்கைக்கு நாங்கள் பதிலளிக்கத் தேவையில்லை. எனினும், ஐ.நா. ஊழியர்கள் யாரையும் நாங்கள் மிரட்டவில்லை என்பதைக் கூற விரும்புகிறேன். ஐநா உள்பட அனைத்து மனிதாபிமான அமைப்புகளுடனும் அரசு நல்லுறவு கொண்டிருந்தது'' என்றார்.
No comments:
Post a Comment
thanks for u r comments